நிலம் புயல் தாக்கிய பிரதீபா காவிரி கப்பலிலிருந்து குதித்து உயிரிழந்தவரின் பெற்றோர் தற்கொலை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையை உலுக்கியது நிலம் புயல். இந்தப் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. ஆனால் சென்னையில் பலத்த பேய்க்காற்று வீசியது. இதில் சிக்கி பெசன்ட் நகர் பகுதியில் தரை தட்டியது மத்திய அமைச்சர் சரத் பவாரின் குடும்பத்துக்குச் சொந்தமான பிரதீபா காவிரி கப்பல்.
கப்பல் தரை தட்டியதால் தப்பிப்பதற்காக அதிலிருந்து கடலில் குதித்தனர் ஆறு மாலுமிகள்.அதில் பரிதாபமாக ஆறு பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். காலாவதியாகிப் போன கப்பல் இது என்றும், லைசன்ஸ் புதுப்பிக்கப்படாத கப்பல் என்றும் பின்னர் தெரிய வந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த உதவியையும் பிரதீபா காவிரி கப்பல் நிர்வாகம் தரவில்லை.மேலும் நிரஞ்சனின் குடும்பத்தினரால் வழக்கு செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே வறுமையில் வாடி வந்த அவர்கள் தங்களது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள புளியமாங்குளம் கிராமத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை முடித்து விட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications