ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சிசிடிவி காமிரா மூலம் முக்கிய துப்பு- 15 தனிப்படை போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Hyderabad blast
ஹைதராபாத்: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காமிராக்கள் மூலம் முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய 15 தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராக்களில் சந்தேகப்படும்படியாக சிலரது நடமாட்டம் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த சந்தேக நபர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக கொனார்க் திரையரங்கம் முன்பாக இருக்கும் ஆனந்த் டிபன் சென்டர் வழியே செல்வதும் பின்னர் 2-வது குண்டு வெடிப்பு இடத்தில் நடமாடுவதும் தெரியவந்துள்ளது. ஆனா சந்தேக நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை.இதனால் அந்த நபரின் முகத்தை தெளிவாகக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று போலீஸ் கமிஷனர் அனுராக் ஷர்மா கூறியுள்ளார்.

இதேபோல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அப்பகுதியில் பேசப்பட்ட செல்போன் பதிவுகளும் ஆராயப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள 15 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு தனிப்படையிலும் 10 முதல் 15 போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை எவரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

சம்பவ இடங்களில் 38 இடங்களில் சிசிடிவி காமிராக்கள் இயங்கவில்லை என்று கூறப்படுவதையும் ஆந்திர போலீசார் நிராகரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+