For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத்தில் மன்மோகன்சிங்,சோனியா- குண்டுவெடிப்பில் பாதித்தோருக்கு நேரில் ஆறுதல்!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் மன்மோகன்சிங்,ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஹைதராபாத்தில் கடந்த வியாழன்று தில்சுக் நகரில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 16 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை பிரதமர் மன்மோகன்சிங் கண்டித்திருந்தார். இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டோரை தப்பிவிடமாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு தலா ரூ2 லட்சம் நிவாரண உதவியையும் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி ஆகியோர் ஹைதராபாத் வந்தடைந்தனர். இருருவரும் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர்.

Manmohan singh
பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விவரங்களை ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இருவரிடமும் விவரித்தார்.

English summary
Prime Minister Manmohan Singh today reached Hyderabad and to visit the hospital where the injured are being treated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X