நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்- கட்டண உயர்வு அறிவிப்பு?
Subscribe to Oneindia Tamil

ரயில்வே பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டை பவன்குமார் பன்சால் முதல் முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார்.
பன்சால் தமது முதல் பட்ஜெட்டில் ரயில்களில் உணவு விநியோகத்தில் மேம்பாடு, ரயில்நிலையங்களின் தரங்களை உயர்த்துதல்; நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ரயில்சேவைகள் போன்றவற்றை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அண்மையில் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெ நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த டீசல் விலை உயர்வால் ரயில்வேக்கு ரூ3,300 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் கணிசமான அளவுக்கு கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications