கோவை அருகே லாரியில் கடத்தப்பட்ட 5 டன் வெடிபொருள் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil

இந்த வெடிபொருள் எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்று தெரியவில்லை. கேரளாவில் சதிச் செயல் எதற்கேனும் திட்டமிடப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கிய வெடிபொருள், அமோனியம் நைட்ரேட் ஆகும். இது வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுவதாகும். சம்பந்தப்பட்ட லாரியை அப்துல் கரீம் என்பவர் ஓட்டிச் சென்றார். போலீஸாரின் சோதனையில் வெடிபொருள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அப்துல் கரீமையும் கைது செய்தனர்.
கரீமிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. யாருக்காக, எங்கு இந்த வெடிபொருளை அவர் கொண்டு சென்றார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications