கைதட்டாத விவசாயிகளை உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று தூற்றிய அமைச்சர்
தஞ்சாவூர்: பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயி்கள் கைதட்டாமல் அமர்ந்திருந்ததால், அவர்களைப் பார்த்து கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்றும் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் திட்டியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டார். விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். அப்போது விவசாயிகள் கைதட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் அமைச்சர் கோபமடைந்தார்.
விவசாயிகளைப் பார்த்து கோபமாக பேசியபடி கைதட்டுமாறு கூறினாராம். மேலும் விவசாயிகளை உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்றும் அவர் வர்ணித்ததாக தெரிகிறது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை மறந்து ஏதோ தனது சொந்த பணத்தை தருவது போல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியிருப்பது மிக மோசமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications