புற்றுநோய்: மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவி மரணம்
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவி ஆஷா சிங் இன்று காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங்கின் மனைவி ஆஷா சிங்(58). அவர் பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அன்ட் பைலியரி சயன்சஸில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே புற்றுநோய் முற்றிப் போய் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் மரணிக்கும்போது திக்விஜய் சிங் உள்ளிட்ட குடும்பத்தார் அவருடன் இருந்தனர் என்று மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷா அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். அவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.












Click it and Unblock the Notifications