லோக்சபா தேர்தல்: மகாராஷ்டிரா காங்கிரசாருடன் ராகுல் 'தீவிர' ஆலோசனை

காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் களம் இறங்குகிறது. ராகுல் காந்தியும் சளைக்காமல் கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று மும்பை சென்றுள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் தற்போதுதான் முதன் முதலாக மும்பை சென்றுள்ளார். மத்திய மும்பையில் உள்ள மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான திலக் பவனுக்கு சென்ற அவர் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ரே தாக்கரே, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கூட்டத்தில் மாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் லோக்சபா தேர்தல் பிரசார யுக்திகள் குறித்து ராகுல் ஆலோசித்தார்..
முன்னதாக ராகுல் மத்திய மும்பைக்குள் வந்த போது 8 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications