ஜேபிசி முன் சாட்சியம் அளிக்க அழைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: ஆ. ராசா மிரட்டல்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பாக ஆஜராகி சாட்சியம் அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
அண்மையில் இந்த கூட்டுக்குழுவின் முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தற்போது அட்டர்னி ஜெனரலாகவும் உள்ள வாஹன்வதி ஆஜராகி, 2ஜி தொடர்பான ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில் இருந்த அறிக்கையின் ஒரு பாராவை ஆ.ராசா நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு பேனாவால் சில வரிகளை எழுதியிருக்கிறார். இதன் மூலம் அவருடைய செயலுக்கு நான் உடன்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்தே தாம் பதிலளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஆ. ராசா கோரி வருகிறார். இது தொடர்பாக சபாநாயகர் மீராகுமாருக்கும் ஒரு கடிதத்தை ஆ. ராசா அனுப்பியிருக்கிறார். இருப்பினும் ஆ.ராசாவுக்கு சாட்சியம் அளிக்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனிடையே தம்மை சாட்சியம் அளிக்க அனுமதிக்காவிட்டால் பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஆ.ராசா மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications