பிரதமர் மன்மோகன்சிங்கை 'நைட் வாட்ச்மேன்' என்பதா?: மோடியின் பேச்சுக்கு காங். கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 'நைட் வாட்ச்மேனாக' நியமித்திருக்கிறது என்றும் சாடியிருந்தார். இதேபோல் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலையும் வெளுத்து வாங்கினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘மோடி பேசிய வார்த்தைகள் தவறானவை, அநாகரிகமானவை. எப்படி பேசுவது என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் பிரதமர் பதவி என்பது மரியாதைக்குரியது. யாரைப்பற்றி பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என தெரிந்து பேச வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஷீத் ஆல்வி கருத்து கூறுகையில், எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு மூத்த தலைவரிடமிருந்து இப்படிப்பட்ட விமர்சனம் வந்தது துரதிர்ஷ்டவசமானது. மன்மோகன்சிங், காங்கிரசின் பிரதமர் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர். அவர் மதிக்கப்படவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications