திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி விவசாய தம்பதி பலி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதியர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமத்தூர் கிராமத்தை சேர்ந்த வாண்டு கவுண்டர், அவரது மனைவி லட்சுமி அம்மாளுடன் இன்று காலை வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயல் வரப்பின் குறுக்கே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாண்டு கவுண்டருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

அவர் கீழே விழவே அவருக்கு பின்னால் சென்ற மனைவி லட்சுமி அவரை காப்பாற்றும் முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த தம்பதியரின் மகனான வடிவேலு என்பவரும் சில மாதங்களுக்கு முன்னர் இதே போல வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே முறையின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வடமத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+