குழந்தை ஜனனியின் காது கேட்க, வாய் பேச உதவுங்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகள் ஜனனி. காய்ச்சல் என்று வந்து படுத்தாள். அவ்வளவுதான், இன்று, காது கேட்கும் திறனை இழந்து படிப்படியாக பேச்சுத் திறனையும் இழந்து தவிக்கிறாள். ஜனனியின் நிலையால் அவளின் பெற்றோருக்கு மட்டுமல்ல அருகில் உள்ளவர்களையும் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
முத்துவேல்- மணிமேகலையின் தம்பதியரின் மகள்தான் ஜனனி. 5 வயதுவரை துறு துறு என்று ஓடியாடிக் கொண்டிருந்த ஜனனி, 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் காய்ச்சல் என்று சுருண்டு படுத்தாள்.
வைரஸ் காய்ச்சல் என்று கருதி மருந்து கொடுத்தார்கள். மருத்துவமனைகளுக்கு சென்றும் உடல்நிலை சரியாகவும் இல்லை.
இந்த நிலையில், செவித்திறன் கேட்காமல் போகவே, எம்.சி.வேலுச்சாமி மெமோரியல் செவித்திறன் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்யவே, காக்லியர் இம்ப்ளான்டேஷன் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஆபரேசன் செய்ய 7 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூற, பதறிப் போயினர் பெற்றோர். உடனடியாக ஆபரேசன் செய்யவில்லை எனில், காது கேட்கும் திறனோடு வாய் பேசும் திறனும் முற்றிலும் குறைந்து போகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கவே உதவி கேட்டு உறவினர்களிடமும், நண்பர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
முத்துவேல் பாடி பில்டர் என்பதல் நிகழ்ச்சிகள் நடத்தி ஓரளவிற்கு பணம் சேகரித்துள்ளார். இதுவரை நிதியாக ரூ. 4.25 லட்சம் ரூபாய் சேர்ந்திருக்கிறது. இதனை வைத்து ஜனனியின் ஆபரேசன் இன்று (மார்ச் 4) வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
இனி பத்து நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். மருந்து மாத்திரை என பல்வேறு செலவுகள் இருக்கின்றன. தவிர 6 மாத காலம் ஸ்பீச் தெரபி எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு தனி மருத்துவ செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே ஜனனி செவித்திறன் கேட்கவும், வாய் பேசவும் நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் ஜனனியின் பெற்றோர்.
உதவுங்களேன் ஜனனிக்கு...
தொடர்புக்கு முத்துவேல்
செல்போன்: 95783-91883
S.MUTHUVEL.
STATE BANK OF INDIA,
A/C NO 30820263736
SBIN 0009314
VEERAPANDI BRANCH,
TIRUPUR.












Click it and Unblock the Notifications