தமிழகம் முழுவதும் வலம் வரும் கலைஞர் கருவூலம்: கருணாநிதி துவங்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தை வலம் வரும் வகையில் ‘கலைஞர் கருவூலம்' என்ற கலைஞர் நகர்வு ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் ‘கலைஞர் கருவூலம்' என்ற கலைஞர் நகர்வு ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வு ஊர்தியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மற்றும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்களும் விற்பனைக்கு உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களிலும், கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் "கலைஞர் நகர்வு ஊர்தி'' மூலம் பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்த ஊர்தியை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி. டி.ஆர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications