மன்னார்குடி: 6 மாத காதலுக்கு சிக்கல்... தூக்கில் தொங்கிய காதலர்கள்
மன்னார்குடி: 6 மாதமாக காதலித்து வந்த கல்லூரி மாணவியும், லாரி டிரைவரும், தங்களது காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியதால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
மன்னார்குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் மாதவன் (20). இவர் ஒரு லாரி டிரைவர். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சங்கரி (19).
சங்கரியின் அக்காள் கணவரின் தம்பிதான் இந்த மாதவன். சங்கரி பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். அடிக்கடி சங்கரி வீட்டுக்கு வருவார் மாதவன். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாத காதலித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications