கச்சத்தீவை மீட்கக் கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 165 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் கடலில் தேசியக் கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியினர் உள்பட 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் நிறுவனர் முருகவேல்ராஜன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு, ஒன்றாக கடலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் கடலுக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

அதையும் மீறி முருகவேல்ராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் வையமுத்து, மாநில துணை தலைவர் வீரஜோதிராஜன், ஆதி தமிழர் மக்கள் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் தேசியக் கொடியுடன் கடலில் இறங்கினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த ராமேஸ்வரம் துணை எஸ்.பி. மணிவண்ணன் தலைமையிலான போலீசார், கச்சத்தீவை மீட்கக் கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 165 பேரை கைது செய்தனர். பின்பு அவர்களை விடுதலை செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+