For Daily Alerts
Just In
காட்பாடியில் மனைவியை அடித்து உதைத்த கல்லூரி பேராசிரியர் கைது
வேலூர்: காட்பாடியில் மனைவியை தாக்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவருடைய மனைவி லட்சுமி(35). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் செந்தில்வேல் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது, அடித்து உதைப்பது என்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து லட்சுமி காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று செந்தில்வேல் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்தில்வேலை கைது செய்தனர்.
மனைவியை தாக்கியதற்காக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
English summary
Sethilvel, a college professor was arrested after his wife complained of domestic violence.
Story first published: Tuesday, March 5, 2013, 11:17 [IST]