மதுரைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் சம்பவம் நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இது தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை தவிர மும்பை, ஹைதராபாத், நாக்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹைதராபாத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் குண்டு வெடிப்பு நிகழலாம் என உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+