10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும்- கணேசமூர்த்தி எம்.பி

Subscribe to Oneindia Tamil

MDMK urges Centre to respect the feelings of World Tamils
டெல்லி: ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் செயல் இன்று நேற்றல்ல காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும். 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி கணேசமூர்த்தி மக்களவையில் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது:

இலங்கையில் தமிழர்கள் இனம் திட்டமிட்டு காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சாலமன் பண்டாரநாயகே காலத்தில் இருந்தே இனப்படுகொலை தொடங்கிவிட்டது.

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழகர்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டனர். அன்று தொடங்கிய இனப்படுகொலை ராஜபக்சே காலம் வரை தொடர்கிறது.

இந்த பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாகமுடியும். இலங்கை அண்டை நாடு என்ற அடிப்படையில்தான் இந்தியா இந்த பிரச்சினையை பார்க்கிறதே தவிர தமிழ்நாட்டில் உள்ள 10 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா?.

ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருவதற்கு இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?.

உலகத்தில் அதிகமாக இந்துக்கள் வாழும் நாடு இந்தியா. இலங்கையில் இந்துக் கோவில்களும், இந்துக்களும் அழிக்கப்படுகின்றனரே அந்த வகையிலாவது தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்துக்களையும், தமிழர்களையும் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது.

இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. வே தவறு செய்வதாக சொன்னால் யாரிடம் சென்று முறையிடுவது; ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினால் யாதொரு பயனும் இருக்கப் போவதில்லை அதற்குப் பதிலாக இந்தியாதான் தீர்மானம் கொண்டு வர வேண்டும்; இலங்கையில் பொது வாக்கெடுப்பு கோர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு உலக அரங்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்களை சேனல் 4 வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. எனவே ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். இவ்வாறு கணேச மூர்த்தி எம்.பி மக்களவையில் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+