புதுவை மீனவர்கள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி தாக்கிய இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுவை மீனவர்கள் 4 பேரின் கண்களில் மிளகாய்த்தூள் தூவி அவர்களை தாக்கிவிட்டு, ரூ.15 லட்சம் மதிப்புள்ள கருவிகளை கடலில் வீசியுள்ளது இலங்கை கடற்படை.

புதுவை காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2 தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படை அங்கு வந்துள்ளது. மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

இது குறித்து காயம் அடைந்த மீனவர் சந்திரகுமார் கூறுகையில்,

இலங்கை கடற்படையினர் எங்களுடைய ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டனர்.
எங்கள் வலைகளை நறுக்கிவிட்டனர். ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கருவிகளை இழந்துவிட்டோம். இந்த தாக்குதல் நடந்தபோது ஒரேயொரு மீனவர் மட்டும் படகின் என்ஜினுக்கு அருகில் ஒளிந்து கொண்டதால் தப்பித்தார் என்றார்.

இன்று கரை திரும்பிய அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் காரைக்காலைச் சேர்ந்த 40 வயது மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+