ஜெனிவா தீர்மானம்: இலங்கையை காப்பாற்ற அமெரிக்காவுடன் சு.சுவாமி பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil

அண்மையில் இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திடீரென அமெரிக்கா சென்ற அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினாலும் இலங்கைக்காகவே அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு தமக்கு திருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையே விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்புகளை விசாரணைக்கு அழைப்பது என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை மகிழ்விக்கச் செய்யும் என்று பிளேக்கிடம் கூறியதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications