நீதி கிடைப்பதில் தமிழகத்தை விட மோசமானது கர்நாடகம் - மதானி பாய்ச்சல்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி, தனது மகள் திருமணத்திற்காக 5 நாள் பரோலில் கேரளா வந்துள்ளார்.
நேற்று கொல்லத்தில் அவரது மகள் திருமணம் நடந்தது. அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பரோலில் அவரை விடுவித்த கர்நாடக உயர்நீதமன்றம் பல்வேறு நிபந்தனைளையும் விதித்தது. அதில் முக்கியமானது, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தரக் கூடாது, நிகழ்ச்சி எதிலும் பேசக் கூடாது என்பது. இருப்பினும் தனது மகள் திருமணத்தின்போது மதானி பேசினார். அப்போது கர்நாடக நீதித்துறையை கடுமையாக அவர் சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதானி பேசுகையில், எனக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. நீதியின் வெளிச்சம் என்னிடமிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் பரோலில் வந்திருப்பதால் நீதித்துறை அமைப்பு மாறி விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம். எனக்கு பரோல் மறுக்க முடியாது என்ற கட்டாயத்தால்தான் நான் ஜாமீனில் விடப்பட்டேன்.
கேரளாவில் நீதித்துறை சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பதை நான் நிம்மதியாக உணர்கிறேன். அதேபோல தமிழகமும் கூட பரவாயில்லை. தமிழத்தை விட கடுமையாக இருக்கிறது கர்நாடகம்.
சிறையில் நான் ஒரு அப்பாவி மட்டுமே இருக்கவில்லை. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அடைபட்டுள்ளனர். நான் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நம்முடைய மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி அனாதைச் சிறுவனையும் அடைத்து வைத்துள்ளனர் என்றார் மதானி.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications