''நான் அவனில்லை'': போலீசாரை கலாய்க்கும் ஜெர்மனி பெண்ணை கற்பழித்த பிட்டி!

Subscribe to Oneindia Tamil

Bitti Mohanty
கண்ணூர்: ராஜஸ்தானில் வைத்து ஜெர்மனி பெண்ணை கற்பழித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொந்தியின் மகன் பிட்டி மொஹந்தி கேரளாவில் கைது செய்யப்பட்டார். முதலில் தான் தான் பிட்டி என்று ஒப்புக்கொண்ட அவர் தற்போது தனது பெயர் ராஜீவ் ரஞ்சன் என்று சாதிக்கிறார்.

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.

கேரள போலீசார் பிட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தன் பெயர் பிட்டி மொஹந்தி என்பதை முதலில் ஒப்புக் கொண்டார். ஆனால் தற்போது தான் ராஜீவ் ரஞ்சன் என்று சாதித்து வருகிறார். இதற்கிடையே ராஜஸ்தான் போலீசார் பிட்டியை அடையாளம் காண இன்று கேரளா வருகின்றனர்.

இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் லால்கோத்தி காவல் நிலைய போலீஸ் அதிகாரி சம்பத் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரில் பணியாற்றி வந்துள்ளார் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். நாங்கள் கேரளாவை அடைந்தவுடன் அவரின் அடையாளத்தை கண்டுபிடிப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+