அரசின் இலவச லேப்டாப் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் மாணவர்கள்!
Subscribe to Oneindia Tamil

இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டர் மூலம் பெருமளவில் ஆதரவு குவிந்து வருகிறது. பேஸ்புக்கில் தனியாகவே பக்கம் தொடங்கி விறுவிறுப்புடன் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர் ஆதரவாளர்கள்.
மேலும், தற்போது மாணவர்கள் நடத்தும் போராட்டம் உலகில் வாழும் தமிழர்க்க அனைவருக்கும் தெரிவதற்கு தமிழக அரசின் மடிக்கணினிதான் மிகவும் உதவியாக இருக்கிறதாம்.
தமிழக அரசு பிளஸ் ஒன், பிளஸ்டூ மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. இந்த லேப்டாப்கள்தான் தற்போது போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களிடம் புழங்கி வருகிறதாம். இவற்றின் உதவியுடன் உடனுக்குடன் செய்திகளை அப்டேட் செய்து வருகிறார்களாம் மாணவர்கள். மேலும் புகைப்படங்களையும் உடனுக்குடன் அப்லோட் செய்யவும் இது பேருதவி புரிகிறதாம்.












Click it and Unblock the Notifications