திகார் சிறையில் ராம்சிங் தூக்கிட்டுதான் தற்கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பஸ் ஓட்டுநர் ராம்சிங் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் மைனர் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இந்நிலையில் திகார் சிறையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்சிங்கின் உறவினர்கள் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் கூறினர்.
இதனிடையே டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வழக்கின் மாஜிஸ்திரேட் மற்றும் ராம்சிங்கின் பெற்றோர் முன்னிலையில் இன்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முதல் கட்ட பரிசோதனையில் ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications