காளகஸ்தி தேரோட்டம்- சரிந்த கலசம்! நெரிசலில் சிக்கி பெண்கள் மயக்கம்!
காளகஸ்தி: பிரசித்தி பெற்ற காளகஸ்தி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தின் போது சாமி கலசங்கள் சரிந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் மயக்கமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு இந்த தேரோட்டம் தொடங்கியது. மாடவீதியில் சாமி தேர் வந்தபோது உச்சியில் இருந்த கலசம் சரிந்தது. அரை மணி நேரம் கழித்து இதை கவனித்த ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் தேரோட்டம் நிறுத்தப்பட்டது, குறுகலான தெருக்களில் தேர் நகர்ந்த பொது நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
தேர் மீது பக்தர்கள் உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.