5 இலைகள் தான் உதிர்ந்துள்ளன; ஆனால் தேமுதிக என்பது ஆலமரம்: பிரேமலதா

தேமுதிக மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசிய பிரேமலதா, பெண்ணாகப் பிறப்பதே மகா தவம் என்று கூறுவதுண்டு. ஆனால் இப்போது நாம் பெண்களாக ஏன் பிறக்க வேண்டும் என்று சிந்திக்கக்கூடிய அளவில் கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வினோதினி முதல் வித்யா வரையிலான பெண்கள் மீது ஆசிட் வீச்சு நடந்துள்ளது.
பள்ளிச் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் மது விற்பனை தான்.
கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களுக்கு அடிப்படையாக இருப்பதும் டாஸ்மாக் தான். டாஸ்மாக் மதுக்கடைகளை கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு சம பங்கு உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது.
டாஸ்மாக் மது கடைகளை மூடினால் தமிழகத்தின் ஒட்டு மொத்த வருமானம் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் எப்படி பூரண மது விலக்கை அமல்படுத்தினார்கள்?
தமிழகத்தில்தான் அதிக இளம் விதவைகள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதற்குக் காரணம் டாஸ்மாக் தான்.
ஓட்டுக்காக காசு கொடுக்க யார் வந்தாலும் நீங்கள் ஏமாறாதீர்கள். இலவசம் என்ற பெயரில் ஓட்டுகளை வாங்கும் அதிமுக, திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தேமுதிக எம்.எல்.ஏக்களை அதிமுகவில் சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். தேமுதிகவில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் விலகிவிட்டால் கட்சியே அழிந்து விட்டதாக அர்த்தமல்ல. சட்டசபையில் பல கட்சிகளைச் சேர்ந்த எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எல்லாம் இவர்கள் கண் படவில்லை. தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது மட்டும் கண் படுகிறது. இது தேமுதிகவின் வளர்ச்சியை காட்டுகிறது.
5 எம்.எல்.ஏக்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். ஆனால் 50 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கோடை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம் போன்ற காலங்கள் உள்ளது போல இப்போது இலையுதிர் காலம். அதனால் 5 இலைகள் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது.
அந்த 5 தொகுதி மக்களுக்கு சொல்கிறேன். உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்களையும் அவர்கள் விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் பிரேமலதா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications