ஸ்ரீபெரும்புதூரில் 7 வயது சிறுமி கற்பழிப்பு - 17 வயது மாணவன் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர வைததுள்ளது.
எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரமாக உள்ளது. என்ன தண்டனை கொடுத்தாலும் காமுகர்கள் திருந்துவதாக இல்லை. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு கல்லூரி மாணவர்.
ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தை அடுத்த சந்தவேளு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (17), காஞ்சிரபுத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் எதிரே வசிக்கும் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, ரமேசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications