20ம் தேதி தமிழகத்தில் ஒரு கோடி மாணவர்கள் உண்ணாவிரதம்- ஆர்.நல்லக்கண்ணு
மன்னார்குடி: மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கும் திட்டமிட்ட போராட்டம். சர்வதேச போர் நெறிமுறைகளை சிறிதும் பின்பற்றாமல், பாதுகாப்பான இடம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்களையும் ஈவு இறக்கமின்றி விமானத்தின் மூலம் கொத்துக்குண்டுகளை வீசி இலங்கை அரசு கொன்று குவித்தது.
இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேடும் ஏற்படுத்தும் வகையில் தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் 1 கோடி போர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளனர் " என்றார்.












Click it and Unblock the Notifications