அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பொய்யர்: ஷாரா பாலின் புகார்
Subscribe to Oneindia Tamil

கன்சர்வேடிவ் அரசியல் மாநாட்டில் பேசிய ஷாரா பாலின், மிகவும் வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என்று ஒபாமா உறுதியளித்திருந்தார். பராக் ஒபாமா அவர்களே நீங்கள் பொய்யர்..ரோம்னியை ஒபாமா வீழ்த்தியதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒபாமா கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டது. அப்படித்தான் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்ட விவகாரத்திலும் ஒபாமா நடந்து கொள்கிறார். நாங்கள் சொற்களின் மீது வண்ணமயமான அலங்கார வார்த்தைகளைப் பேசுவது இல்லை. ஒரு அரசாங்கம் மக்கள் நலன் அரசாக இருக்க வேண்டும்.
அரசியல் எனும் விளையாட்டில் எல்லோரும் எப்போதும் வெற்றியே பெற முடியாது.. எப்போதும் தோல்வி அடையவும் மாட்டார்கள்.. நாங்கள் அமெரிக்காவை சீரமைப்போம் என்றார் அவர்.
கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் ஷாரா பாலின்.












Click it and Unblock the Notifications