பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு நற்செய்தி.. இட ஒதுக்கீடு வருமான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு

இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இதற்கு விரைவிலேயே ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இந்த உச்ச வரம்பை கிராமப்புறங்களுக்கு ரூ.9 லட்சமாகவும், நகரங்களுக்கு ரூ.12 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து இதை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு, வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக இருந்த உச்ச வரம்பு, கடந்த 2008ம் ஆண்டு ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் வருமான உச்சவரம்பே இல்லாமல் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் க்ரீமி லேயர் என்ற ஒரு விதியைக் கொண்டு வந்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நிபந்தனையையும் சேர்ந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications