Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு நற்செய்தி.. இட ஒதுக்கீடு வருமான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு

Subscribe to Oneindia Tamil

P chidambaram
டெல்லி: பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்க மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இதற்கு விரைவிலேயே ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இந்த உச்ச வரம்பை கிராமப்புறங்களுக்கு ரூ.9 லட்சமாகவும், நகரங்களுக்கு ரூ.12 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.

ஆனால், இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து இதை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு, வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக இருந்த உச்ச வரம்பு, கடந்த 2008ம் ஆண்டு ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் வருமான உச்சவரம்பே இல்லாமல் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் க்ரீமி லேயர் என்ற ஒரு விதியைக் கொண்டு வந்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நிபந்தனையையும் சேர்ந்து விட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+