அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம்
புதுச்சேரி: இலங்கையின் போர்க்குற்றங்களை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர திமுக, அதிமுக விடுத்த கோரிக்கையை புதுவை அரசு நிராகரித்தது.
நடப்பாண்டில் புதுவை சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் இக்பால்சிங் உரையாற்றினார். பின்னர் முதல்வர் ரங்கசாமி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில், இலங்கையில் நடந்த போரில் மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடு கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று மத்திய அரசை இந்த சட்டசபை வற்புறுத்துகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எழுந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தினர். ஆனால் இதை அரசு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சபாபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications