ராஜ்யசபாவில் போராட்டம் நடத்திய திமுக எம்பி. வசந்தி ஸ்டான்லி மயக்கம்!

இலங்கைக்கு எதிராக ராஜ்யசபாவில் போராட்டம் நடத்திய திமுக எம்.பி வசந்தி ஸ்டான்லி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
திமுக எம்.பி.யான வசந்தி ஸ்டான்லி பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார்.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசினை திமுக நிர்பந்தம் செய்தது. இதனையடுத்து கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலையில் மூன்று திமுக அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்த பதவி விலகல் கடிதத்தை அளித்தனர்.
இதனிடையே ராஜ்யசபாவில் இலங்கை தமிழகர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முழக்கமிட்ட எம்.பி வசந்தி ஸ்டான்லி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். வசந்தி ஸ்டான்லி பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications