மன்மோகன், சோனியாவுடன் அழகிரி தனியாக அப்படி என்ன தான் பேசினார்? பரபரப்பு தகவல்கள்

மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 5 பேர் நேற்று பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அதில் மு.க. அழகிரி மட்டும் பிரதமரை தனியாக சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அப்போது அழகிரியை வரவேற்ற மன்மோகன் சிங் திமுகவின் முடிவு தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அங்கு வருவதால் சற்று நேரம் காத்திருக்குமாறு அவர் அழகிரியை கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் சோனியா அங்கு வந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர்.
2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமரான போது திமுக தலைவர் கருணாநிதி தான் அவரை முதன் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதை நினைவு கூர்ந்த பிரதமர் இந்நாள் வரை ஆதரவு அளித்து வந்ததற்கு அழகிரியிடம் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து சோனியா அழகிரியிடம் மனம் திறந்து பேசியுள்ளார். கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் முன்பு உங்கள் தந்தை என்னிடமோ அல்லது பிரதமரிடமோ பேசியிருக்கலாம். அவ்வாறு செய்யாதது வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சோனியா பேச்சைக் கேட்ட அழகிரி நெகிழ்ந்து போய்விட்டாராம். ஆனால் கட்சி மேலிடம் எடுத்த முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அழகிரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் பிரதமர் மற்றும் சோனியாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications