அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு!: இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!!

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. தொடக்கத்தில் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை கூறப்பட்டிருந்தது. ஆனால் பல சுற்று வாதங்களுக்குப் பின்னர் மிகவும் மென்மையான போக்குடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது.
இந்தத் தீர்மானத்தின் மீது முதலில் பேசிய பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் சில அம்சங்களை நீக்கவும் வலியுறுத்தியது. அத்துடன் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று தெளிவான நிலைப்பாட்டையும் அறிவித்தது.
பின்னர் பேசிய இந்திய பிரதிநிதி, இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலக நாடுகள் ஏற்கக் கூடிய நம்பகமான விசாரணை தேவை என்று கூறியிருந்தார்.
இத்தீர்மானத்தை ஏற்க முடியாது என்று இலங்கையின் பிரதிநிதியான அமைச்சர் சமரசிக்கே அறிவித்திருந்தார். தமது நாட்டின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை விரும்புவதில்லை என்றார்.
பின்னர் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 2-வது முறையாக தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications