புதிய பாலியல் குற்ற தடுப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு: ஜெயா பச்சன் கருத்து

புதிய பாலியல் குற்ற தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ஜெயா பச்சன் பேசியதாவது,
'எனது கட்சியின் கட்டளைப்படி இந்த சட்ட மசோதாவை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு சில நெருடல்கள் உள்ளது.
இந்த மசோதா ஒரு கண் துடைப்பு மட்டுமே. லோக் சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பெண் நிருபரை மூத்த எம்.பி. ஒருவர் கேவலமாக விமர்சித்துள்ளார். இது வெட்கக்கேடானது.
குற்றச்சாட்டு குறித்து மேலிடத்தில் உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், பலர் பூலான் தேவியாக மாறக்கூடும்.
இந்த சட்டத்தில் உள்ள பல பிரிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. பெண்களை பின் தொடர்ந்து கேலி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் பிரிவு கண்டனத்துக்குரியது.
ஆண்கள் மட்டும் பெண்களை கேலி செய்வதில்லை. பெண்களில் பலரும் ஆண்களை கேலி செய்வதுண்டு. அவனைப் பார் எப்படி இருக்கிறான் என்று சில ஆண்களை பெண்கள் விமர்சிப்பதை என் காதுபடவே கேட்டிருக்கிறேன்.
அதனால், ஒரு பிரிவினரை திருப்திப்படுத்துவதற்காக வேறொரு பிரிவினரை வஞ்சிக்கக்கூடாது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் பல ஆண்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்'.
இவ்வாறு அவர் கூறினார்.











Click it and Unblock the Notifications