இந்தியாவில் போலி பல்கலைக்கழங்களை மூட பிரதமருக்கு கோரிக்கை

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யூ.ஜி.சி) கண்டுபிடித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை யூஜிசி வெளியிட்டு வருகிறது. இதே போன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் (ஏ.ஐ.சி.டி.இ.) தங்களிடம் அங்கீகாரம் பெறாமல் தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டது. இதனால் பொறியியல் மற்றும் இதர படிப்புகளில் சேரும் மாணவர்கள் அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை பார்த்துவிட்டு சேரவும்.
போலி பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ் மற்றும் டிகிரியை வேறு எந்த கல்லூரிகளும், நிறுவனங்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் மாணவர்களே உஷார்.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு டெல்லியைச் சேர்ந்த கெரியர்ஸ்360 என்ற பத்திரிக்கை பதிப்பாளர் மகேஸ்வர் பெரி என்பவர் இந்தியாவின் கல்வி முறையை சுத்தப்படுத்த உதவுங்கள் என்ற தலைப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை மனுவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு போலி பல்கலைக்கழங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
(அந்த கோரிக்கை மனுவில் உடனே கையெழுத்திடுங்கள்)
பெற்றோர், மாணவர்கள், தொழில் முனைவோர், பங்குதாரர்கள் மற்றும் இந்திய குடிமகன்கள் அனைவரும் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதோடு இதை பிறருக்கும் தெரிவியுங்கள். கல்வி உங்கள் உரிமை. அதில் ஏமாந்துவிடாதீர்கள்.
போலி பல்கலைக்கழகங்களை மூட உடனே செயல்படுங்கள். ஒரு இந்திய குடிமகனாக எங்கள் பங்கை செய்துவிட்டோம். இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு கல்வித் திட்டம் வளம் பெற உதவுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications