கோவில்பட்டியில் தேவர் சிலை சேதம்: சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, பதட்டம், 11 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சங்கரலிங்கரபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ சேதப்படுத்தியுள்ளனர். நேற்று காலை சிலை சேதமடைந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த செயலைக் கண்டித்து கோவில்பட்டியில் ஆங்காங்கே சாலை மறியல் நடத்தப்பட்டது. மேலும் கோவில்பட்டி தினசரி சந்தை, பெட்ரோல் பங்குகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நகரில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும், புதிய சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிலையை சேதப்படுத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், புதிய சிலை வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் மயிலாடியில் செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலை கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சிலை இருக்கும் இடத்திற்கு அருகே வைக்கப்பட்டது. பழைய சிலையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த புதிய சிலையை நிறுவும் பணி உடனே துவங்கும் என்று போலீசார் கூறினர்.
சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, காளிராஜ், ராஜகுரு, சிவா என்ற ஜெயசிவா, செல்லதுரை, விமல், ஹரிகிருஷ்ணன், நடராஜன், விஜயகுமார் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு:
நெல்லை மாவட்டத்தில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாவட்ட ஏடிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் மணிமுத்தாறு பட்டாலியன், மாவட்ட ஆயுதப்படை போலீசார், மற்றும் ஊர்காவல் படையினர் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10 சிலைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications