மாணவர்கள் போராட்டம்: மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கப்படும்?
சென்னை: மாணவர்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கும் என்று தெரியவில்லை.
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கையில் நடந்தது இனப் படுகொலை, போர்க்குற்றம் என பிரகடனம் செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டன. அப்படி மூடப்பட்டாலும் மாணவர்கள் போராட்டம் முன்பைவிட தீவிரமானது.
இந்நிலையில் மூடப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்பட்டதாக தெரியவில்லை. இது குறித்து தற்போது வரை அரசு தரப்பில் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று கல்லூரிகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்த மாணவர்கள் அறிவிப்பு எதுவும் இல்லாததால் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.
தங்கள் பிள்ளைகள் சிறு தவறு செய்தாலே கடுமையாக கண்டிக்கும் பெற்றோர்கள் இலங்கை பிரச்சனைக்கு ஆதரவாக தங்கள் பிள்ளைகள் போராடுவது குறித்து மகிழ்ச்சியோடு அவர்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டுகளை 25 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடியனாலும் பரவாயில்லை என்று கூறி அடுத்து கல்லூரி திறக்கும் நாள் அறிவிப்பு வந்தப்பின் முன் பதிவு செய்யலாம் என்று கூறி வருகின்றனர்.
மேலும் நேற்று திருச்சியில் நடந்த மாணவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications