சென்னை, கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் கைமாறுகிறது… அஜீத் சிங் பரிசீலனை

Subscribe to Oneindia Tamil

chennai airport
டெல்லி: சென்னை, கொல்கத்தா விமான நிலைய நிர்வாகத்தை சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அஜீத் சிங் கூறியதாவது:

சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் நமது நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இங்கு விமான சேவைகளை நடத்துவது, நிர்வாகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை சர்வதேச அளவில் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

அதன் பின்னர், விமான நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையம் தனது பொறுப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+