சென்னை, கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் கைமாறுகிறது… அஜீத் சிங் பரிசீலனை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அஜீத் சிங் கூறியதாவது:
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் நமது நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இங்கு விமான சேவைகளை நடத்துவது, நிர்வாகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை சர்வதேச அளவில் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.
அதன் பின்னர், விமான நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையம் தனது பொறுப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications