சட்டசபையில் இருந்து வாக் அவுட் செய்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்த உடன் போக்குவரத்துத் துறை குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளை கேட்க முயற்சி செய்தார். ஆனால் அவர் கேள்வி கேட்க அவை தலைவர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது. தமிழகத்திற்கு இதுவரை 52,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அளவு 29,000 கிலோலிட்டராக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications