உடனே ரூ. 2000 கோடியை கட்டுங்க.. நோக்கியா நிறுவனத்துக்கு ஐடி உத்தரவு
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜனவரி மாதம், நோக்கியா நிறுவனம் மீதான ரூ. 3000 கோடி வரி ஏய்ப்பு புகார் குறித்த விசாரணையை வருமான வரித்துறை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து நோக்கியாநிறுவனத்தில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன. தீவிர விசாரணைக்குப் பின்னர் ரூ. 2080 கோடி வரி ஏய்ப்பில் நோக்கியா ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தை உடனடியாக கட்டுமாறு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நோக்கியா சார்பில் மனு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications