அனைவரும் அன்பு பாராட்ட வேண்டும்: ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:
தியாகச் சுடராம் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகைவரிடத்தும் அன்பு காட்டும் இரட்சகரான இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவு கூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள்.
இந்த நன்னாளில் உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசு பிரான் போதித்த தியாகம், பாவமன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றி வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications