ஊழலுக்கு எதிரான புனிதப்போரை உயிர் உள்ள வரை தொடர்வேன் : அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil

ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, 'ஜனதந்திர யாத்திரை' என்ற பெயரில் நாடு தழுவிய ஓராண்டு கால விழிப்புணர்வு பிரச்சார யாத்திரையை ஆரம்பித்திருக்கிறார்..
பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலாபாக் நகரில் நேற்று தனது யாத்திரையை தொடங்கிய அன்னா ஹசாரே பேசியதாவது, ‘ஊழலுக்கு எதிரான புனிதப்போரை எனது உயிர் உள்ள வரை தொடர்வேன். நாடு பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இருந்து நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான விழிப்புணர்வு இயக்கங்களின் மூலமாக மட்டுமே இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்' என அன்னா பேசினார்.












Click it and Unblock the Notifications