மும்பை வான்கடே மைதானத்துக்குள் நடிகர் ஷாரூக்கான் நுழைய தடை நீடிப்பு!
தடை ஏன்?
கடந்த ஆண்டு நடைபெற்ற 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மே 18-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியின் போது உரிய அடையாள அட்டை இல்லாமல் சென்ற ஷாரூக்கானுக்கும் வான்கடே மைதானத்தின் காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஷாரூக்கான் மீது போலீசிலும் புகார் கூறப்பட்டது. ஆனால் ஷாரூக்கானோ மைதான பணியாளர்கள் தமது குழந்தைகளிடம் அத்துமீறி நடந்தனர்.. அதனால் கண்டித்தேன் என்றார். இந்தவிவகாரத்தில் மும்பை வாக்னடே மைதானத்துக்குள் ஷாரூக்கான் நுழைய 5 ஆண்டுகாலத்துக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.
மும்பையில் 7-ந் தேதி போட்டி
தற்போது மீண்டும் ஷாரூக்கான் தடை பிரச்சினை கிளம்பியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்த தடை நீடிப்பதால் நடிகர் ஷாரூக்கான் இப்போட்டியை ஸ்டேடியத்துக்கு நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுல்ளது. இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் நிதின் தலால் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில கிரிக்கெட் சங்கத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு நபரும், எங்கள் ஸ்டேடியத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற அம்சம் கொண்ட ஒப்பந்தத்தை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று கையெழுத்திட இருக்கிறோம் என்றார்.