விராட் கோலி வீடு முற்றுகை: கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டம்
கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். இந்த நிலையில் கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கிக்காக கோஹ்லியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கோலி தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கிங்பிஷர் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணமில்லை என கூறும் விஜய் மல்லையா, ஐ.பி.எல் வீரர்களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுப்பது எப்படி என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் கோலி பெங்களூர் அணியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு அணியிலுள்ள மற்ற வீரர்களது வீடுகள் முன்பும் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.