For Daily Alerts
Just In
'டாக்டர்' கருணாநிதி விவகாரம்: சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த திமுக
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக அறிவுறுத்தியது. ஆனால் திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.
சிறப்பு கவன ஈர்ப்பு தீரமானம் கொண்டு வரப்படாததை கண்டித்தும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெ. அன்பழகன், சிவசங்கர் ஆகியோர் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் திமுக உறுப்பினர்கள் இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்தனர்.
அதன்படி திமுக உறுப்பினர்கள் யாரும் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Comments
English summary
DMK MLAs boycott TN assembly meet on tuesday over Dr. Karunanidhi issue.
Story first published: Tuesday, April 2, 2013, 15:57 [IST]