ரூ.100 கோடி அபராதம்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனை அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் புகாராகும். இதனையடுத்து ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூட வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 28ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்து ஆலையை மூடுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23ந் தேதி ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் தூத்துக்குடி நகரைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மார்ச் 30ந் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலைக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டுவிட்ட நிலையில் இம்மனுவை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் சுற்றுச்சூழல் நிதியாக நிரந்தர வைப்பாக ரூபாய் 100 கோடியை வைக்கவும் ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு செலவிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேல்முறையீடு-வைகோ

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் . மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+