சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபாலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு ஆங்கிலம் விடைத்தாள்கள் மாயம்
விழுப்புரம்: சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள் மாயமாகியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 230 பேரின் விடைத்தாள்கள் நேற்றே சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த விடைத்தாள்கள் இன்று காலை வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோட்டாட்சியர் மீனா தபால் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். முன்னதாக விருத்தாச்சலத்தில் இருந்து திருச்சிக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்ட 3 பண்டல் பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்களில் ஒரு பண்டல் கீழே விழுந்து சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications