கணவன் மாயம்: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: காணமல் போன கணவரை கண்டுபிடித்து தர வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த இசக்கி. இவருக்கு முள்ளகாடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் என்பருடன் காதல் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கூட்டம்புளி அருகே வசித்து வந்தனர்.

தூத்துக்குடியிலுள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த அன்புராஜ் திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு செல்லவில்லை. மனைவியின் நகையை விற்று செலவு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்புராஜ் திடீரென மாயமானார். இதுகுறித்து அன்பு இசக்கி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதையடுத்து அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த இசக்கி யாரும் எதிர்பாராத நிலையில் கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த மனு கொடுக்க வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கு நின்றவர்கள் ஆனந்த இசக்கியிடம் இருந்த கேனை பறித்தனர். அவரிடம் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இநத சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+