உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. டேவிட்சன், சென்னை ஏ.சி. சஞ்சய் அரோரா இடமாற்றம்- பதவி உயர்வுடன்..
சென்னை: தமிழக டிஐஜி மற்றும் ஐஜிக்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
- சென்னை தலைமையக கூடுதல் கமிஷனர் ஐ.ஜி. சஞ்சய் அரோரா, கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழ்நாடு கமாண்டோ படைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு கமாண்டோ படை கூடுதல் டி.ஜி.பி. தமிழ்செல்வன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
- ஆயுதப்படை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன் சின்கா, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பு ஏற்பார்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணய ஐ.ஜி. சுனில் குமார், கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து கழகத்தின் விசேஷ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் தலைமை பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.
- நெல்லை நகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ஐ.ஜி. சுனில் குமார் சிங்கும் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணயத்தின் கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பு ஏற்பார்.
- மாநில உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக பொறுப்பு ஏற்பார்.
- டெல்லியில் என்.ஐ.சி.எப்.சியில் பணியாற்றும் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், ஐ.ஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தொடர்ந்து டெல்லியில் பணிபுரிவார்.
- மதுரை சரக டி.ஐ.ஜி. பாலநாகதேவியும் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தின் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் வி.ஏ.ரவிக்குமார், ஐ.ஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர் சென்னை நகரின் தலைமையக கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் எஸ்.என்.சேஷசாயி, ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று, அமலாக்கப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை தலைமையக இணை கமிஷனர் ஆர்.எஸ்.நல்லசிவம், ஐ.ஜியாஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி பதவி உயர்வு பெற்று, திருச்சி மத்திய சரக ஐ.ஜியாக பதவி ஏற்பார்.
- சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதர், சென்னை வடக்கு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை வடக்கு இணை கமிஷனர் சங்கர், சென்னை கிழக்கு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.